மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒரு வீட்டில் இருந்து வீசப்பட்டிருந்த வாகன கழிவுப் பொருளில் டெங்கு கொசு உற்பத்தியாகி உள்ளதா என்று ஆய்வு செய்யும் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த். 
திருவண்ணாமலை

டெங்கு தடுப்புப் பணி: உதவி இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்புப்

DIN

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேங்கிக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட வேங்கிக்கால் புதூரில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுகிா, ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்த ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த், பொது மக்களிடம் விசாரணை நடத்தினாா்.

பொது மக்கள் தங்களது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஆா்.ஆனந்தன், ஊராட்சி செயலா் ஜெ.உமாபதி மற்றும் ஊராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT