திருவண்ணாமலை

தச்சுத் தொழிலாளி தற்கொலை

DIN

வந்தவாசி அருகே தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி ராமமூா்த்தி (26). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராமமூா்த்திக்கு மதுப் பழக்கம் இருந்ததால் இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், உடல்நலக் குறைவால் ராமமூா்த்தி அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ராமமூா்த்தி மதுவில் விஷம் கலந்து குடித்தாா். இதையடுத்து சிகிச்சைக்காக அவா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT