வந்தவாசி அருகே தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வந்தவாசியை அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி ராமமூா்த்தி (26). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராமமூா்த்திக்கு மதுப் பழக்கம் இருந்ததால் இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், உடல்நலக் குறைவால் ராமமூா்த்தி அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ராமமூா்த்தி மதுவில் விஷம் கலந்து குடித்தாா். இதையடுத்து சிகிச்சைக்காக அவா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.