திருவண்ணாமலை

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க விழா

DIN

செய்யாறில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 33-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் வட்டக் கிளை துணைத் தலைவர் எஸ்.சத்யா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ச.பாரி, சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோ.ஸ்ரீதரன்,  வட்டக் கிளைத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்டக் கிளைப் பொருளாளர் க.ஜெய்சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT