செய்யாறில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 33-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் வட்டக் கிளை துணைத் தலைவர் எஸ்.சத்யா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ச.பாரி, சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோ.ஸ்ரீதரன், வட்டக் கிளைத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்டக் கிளைப் பொருளாளர் க.ஜெய்சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.