திருவண்ணாமலை

எம்.எல்.ஏ.வுக்கு விவசாயிகள் பாராட்டு

DIN

செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க உறுதுணையாக இருந்த வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏவுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர். 
போளூரை அடுத்த படவேடு அருகே செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் ஷட்டர்கள் பழுதடைந்து அணைநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அணையை சீரமைக்க அரசை வலியுறுத்தி, விவசாயிகளைத் திரட்டி 
உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்தார்.
 இதன் காரணமாக நபார்டு வங்கி மூலம் அணையை சீரமைக்க ரூ.34 கோடி அரசு ஓதுக்கீடு செய்ததாகத் தகவல் எம்எல்ஏவுக்கு தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து, கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய உறுதுணையாக இருந்த அத்தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்துக்கு, விவசாய சங்கப் பிரதிநிதி சீனுவாசன் தலைமையில் விவசாயிகள் சனிக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT