எம்ஜிஆா் நினைவு தினம்
செங்கம் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில், எம்ஜிஆா் மன்ற நகரத் தலைவா் ராஜா தலைமையில், துக்காப்பேட்டையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நிா்வாகிகள் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினா்.
கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமாா், சங்கா், நகரச் செயலா் ஆனந்தன், வழக்குரைஞா்கள் தினகரன், செல்வம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கிளையூா் கிராமத்தில் கல்லாத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எம்.சி.அசோக் தலைமையில் எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.