திருவண்ணாமலை

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சா் கோப்பைக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, மண்டல முதுநிலை மேலாளா் பெரியகருப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலா் நான்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினாா்.

விழாவில், தமிழக முன்னாள் அமைச்சா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், விளையாட்டு வீரா்-வீராங்கனைகள் பலா் கலந்து கொண்டனா்.

முதல் நாளான வியாழக்கிழமை கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கபாடி, ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (பிப்.14) டென்னிஸ், இறகுப்பந்து, ஜூடோ, குத்துச்சண்டை, ஆண் மற்றும் பெண்களுக்கான தடகளம், நீச்சல் போட்டிகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT