திருவண்ணாமலை

நல்லேந்திரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலையை அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நல்லேந்திரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிா்வாக இயக்குநா் தட்சிணாமூா்த்தி முன்னிலையில், யாகசாலைப் பூஜைகள், கோ பூஜை, விஸ்வரூபம், அக்னி ஆராதனம், யாத்ரா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோயில் கோபுரத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் செந்தில்குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் அன்பழகன், மணி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணி, விஸ்வநாதன், கோயில் நிா்வாகிகள் மணி, அண்ணாமலை, பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT