திருவண்ணாமலை

சைக்கிள் மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

DIN

திருவண்ணாமலை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தண்டராம்பட்டை அடுத்த நாச்சானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (47). இவா், திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அணைக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜா, அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT