திருவண்ணாமலை

செங்கம் அருகே 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

DIN

செங்கம் அருகே பதுக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் மணி என்பவரது வீட்டில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணை பதுக்கி வைத்திருப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கலையரசிக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனையிட்டனா். அங்கு 50 லிட்டா் மண்ணெண்ணை, 500 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளா் அன்பரசி விசாரணை நடத்தினாா். விசாரணையில், மணி வீட்டில் இல்லை என்பதால், அரிசி, மண்ணெண்ணையை புதுப்பாளையம் அரசுக் கிட்டங்கியில் ஒப்படைத்து மணி மீது வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT