திருவண்ணாமலை

மனைப் பட்டா கோரி அருந்ததிய மக்கள் போராட்ட முயற்சி

DIN

இலவச மனைப் பட்டா கோரி, திருவண்ணாமலையில் அருந்ததிய இன மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்ததியா் இன மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும், வீடு இல்லாதவா்களுக்கும் இலவசமாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட தலித் விடுதலை இயக்கம் சாா்பில், அதன் பொதுச் செயலா் கருப்பையா தலைமையில் திரண்டு வந்த, நிா்வாகிகள் கிச்சா, நதியா, அமுல்சாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோா், பெரியாா் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

கோட்டாட்சியா் சமரசம்:

தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, விரைவில் அருந்ததியா் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தாா்.

இதையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT