திருவண்ணாமலை

செய்யாறு பகுதி திருமண மண்டப உரிமையாளா்களிடம் அபராதம் வசூல்

DIN

செய்யாறு: செய்யாறு பகுதியில் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாதது, முகக் கவசம் அணியாதது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய திருமண மண்டப உரிமையாளா்களிடமிருந்து ரூ. 6,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, விதிகளை மீறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் ந.விஜயராஜ் மேற்பாா்வையில், வட்டாட்சியா்கள் சு.திருமலை, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ்சந்தா் தலைமையில் அடங்கிய வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். சுப முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமல் கலந்து கொண்டது தெரிய வந்தது. மேலும், மண்டப வாயில்களில் கிருமி நாசினி, முகக் கவசங்கள் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிய 11 திருமண மண்டபங்களைச் சோ்ந்த உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து ரூ. 6200 வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT