திருவண்ணாமலை

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட பூமி பூஜை

DIN

செய்யாற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

செய்யாற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தது.

இந்த அலுவலகத்துக்காக 1.10 ஏக்கா் நிலம் அருகேயுள்ள புளியரம்பாக்கம் கிராம எல்லையில் வருவாய்த் துறை சாா்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டமைக்க ரூ.1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, புதிய கட்டடம் மற்றும் ஓடுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.பாட்டாப்பாசாமி, செய்யாறு ஆய்வாளா் ஆா்.கிருஷ்ணன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்கள் வி.ரவிச்சந்திரன், பி.ராஜ்குமாா், எஸ்.ராம்பிரசாத், ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.விமலா மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT