திருவண்ணாமலை

பழங்குடியினருக்கான வீடு கட்டும் பணி: திட்ட இயக்குநா் ஆய்வு

DIN

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கம் அருகே நடைபெற்று வரும் பழங்குடியினருக்கான வீடு கட்டும் பணியை திட்ட இயக்குநா் ஜெயசுதா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளங்குண்ணி கிராம ஊராட்சி வெள்ளாலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் 32 பழங்குடி சமுதாய பயனாளிகளுக்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகள் அரசு அறிவித்துள்ளபடி தரமாக இருக்கவேண்டும், அதே நேரத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கவேண்டுமென உத்தரவிட்டாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி, அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கா்மாதவன், ஜெயமணி, நீப்பத்துறைத் தலைவா் காசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT