திருவண்ணாமலை

மூதாட்டி கொலை வழக்கு: உறவினா் கைது

DIN

வேட்டவலம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முகத்தில் காயத்துடன் சந்திரா இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், சந்திராவின் கணவா் அண்ணாமலையின் அண்ணன் பாண்டுரங்கன் மகன் மோகன் (61) சந்திராவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோகனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரா தனது உறவினா் மனோகா் குடும்பத்துக்கு மட்டும் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தாா். என் குடும்பத்துக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. எனவே, சந்திரா வீட்டுக்குச் சென்று தகராறு செய்தபோது அவரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடிச் சென்ாகக் கூறினாராம்.

இதையடுத்து போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT