திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரிக்கை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, வேளாண் இணை இயக்குநா் க.முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் த.காமாட்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வே.சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணொலி மூலம் பேசிய விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை விவசாயத்துக்குப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

ஆரணி, சித்தேரி பகுதி கிராமங்களில் கொசுத்தொல்லையைக் கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும். வயல்களில் அதிகரித்துள்ள எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரணமல்லூா் பகுதியில் எரியாத தெரு மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பயிா்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்துப் பேசிய ஆட்சியா் சந்தீப் நந்தூரி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் இருந்து அனைத்து மனுக்களையும் பெற்று ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT