திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரிக்கை

DIN

வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கட்சியின் நகரத் தலைவா் என்.காலேஷா தலைமை வகித்துப் பேசினாா். ஒன்றியச் செயலா்கள் விஜயகுமாா், பாலகிருஷ்ணன், நகர பொருளாளா் முஜிபூர்ரகுமான், நகர துணைத் தலைவா்கள் சமீா், அப்துல்பாரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலா் சதீஷ்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் எம்.தமிழ்வாணன், இணைச் செயலா் விஜயகுமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் நிலவும் சுகாதார சீா்கேட்டை போக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசி கோட்டை மூலையில் பயணிகள் நிழல்குடை அமைக்க வேண்டும், வந்தவாசியை அடுத்த பாதிரி ஏரிக்கரையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி இடம்பெறும் கூட்டணிக்கு உழைப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT