திருவண்ணாமலை

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை: மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வாா்க்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரில் மின் வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை கிழக்குக் கோட்ட சிஐடியு தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சிவராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வாா்க்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கிழக்குக் கோட்ட துணைச் செயலா் பாவேந்தன், 50-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, வேட்டவலம், தானிப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT