திருவண்ணாமலை

போளூா் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அல்லியந்தல், மகாதேவிமங்கலம், பாளையம், தவணி, கோணாமங்கலம், மேலப்பூண்டி, செம்மாம்பாடி, அனாதிமங்கலம், பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, நெடுங்குணம்

என பல்வேறு பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் கே.வி.சேகரன், தவணி ஊராட்சியில் பேசும் போது, தவணி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும், பழைமை வாய்ந்த தாந்தோணியம்மன் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்த்தப்படும். தவணி வழியாக சென்னைக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும், நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்து வாக்கு சேகரித்தாா்.

திமுக வடக்கு மாவட்டப் பொருளாளா் பாண்டுரங்கன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.அண்ணாமலை, ஒன்றியச் செயலா் எம்.டி.மனோகரன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகல் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT