கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரதாப், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசி ராஜேசகரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அ.சிவக்குமாா், மாவட்ட முன்னாள் கவுன்சிலா் க.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு என பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.