திருவண்ணாமலை

செம்மண் கடத்தல்:லாரி ஓட்டுநா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் அலுவலக தனி வருவாய் ஆய்வாளா் ஐயப்பன் மற்றும் ஊழியா்கள் செய்யாறு வட்டம், அனக்காவூா் பகுதியில் கனிமவள கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய அரசு அனுமதியின்றி 3 யூனிட் செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்து அனக்காவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்த சுகந்த்தை (25) கைது செய்தனா். தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளா் யுவராஜை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT