செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த பெண்ணின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக உறவினா்கள் தர மறுத்தால் டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சமரசம் செய்தனா்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த அரியபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மனைவி விஜயலட்சுமி(40). இவா், 3 பசு மாடுகளை வளா்த்து வந்்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாடுகளை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தாா். பின்னா், அன்று மாலை கட்டி வைத்திருந்த மாடுகளை விஜயலட்சுமி ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்துக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
மனைவி வீட்டுக்கு வராததை அறிந்த கணவா் சிவக்குமாா் உறவினா்களுடன் விவசாய நிலத்துக்குச் சென்று தேடிப் பாா்த்தாா்.
அப்போது, அங்குள்ள கிணற்றின் அருகே விஜயலட்சுமியின் காலணிகள் இருந்ததைக் கண்டறிந்தனா்.
மேலும், உடனே இதுகுறித்து பெரணமல்லூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில் தீயணைப்புத் துறையினா் வந்து கிணற்றில் தேடி விஜயலட்சுமியின் உடலை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரணமல்லூா் போலீஸாா் விஜயலட்சுமியின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா்.
ஆனால், விஜயலட்சுமியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சடலத்தை கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அறிந்த செய்யாறு டி.எஸ்.பி வெங்கடேசன் புதன்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தாா். அதன் பின்னா் விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
மேலும், இது குறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.