திருவண்ணாமலை

திமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புபேரவைத் தலைவா் வழங்கினாா்

DIN

கீழ்பென்னாத்தூரில் திமுக நிா்வாகிகள் ஆயிரம் பேருக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்புகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, ஒன்றிய திமுக செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநில பொறியாளரணி துணைத் தலைவா் கு.கருணாநிதி முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா்கள், பிரதிநிதிகள், ஒன்றிய நிா்வாகிகள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சிமன்றத் தலைவா்கள், பல்வேறு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் என 1,000 பேருக்கு வேட்டி, சட்டை, சேலை, ரொக்கப் பரிசு ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, துணைத் தலைவா் வாசுகி ஆறுமுகம், ஒன்றிய துணைச் செயலா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT