திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை:போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்கு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (27). இரு சக்கர வாகன மெக்கானிக். வினோத் வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது உறவுக்கார சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவரது வீட்டுக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்துகொண்டு, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரியா வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT