திருவண்ணாமலை

டிராக்டா் கவிழ்ந்து விபத்து:முதியவா் பலி

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் பலியானாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ரங்கநாதன் (65).

இவா், சனிக்கிழமை இரவு டிராக்டரில் நாரியமங்கலம் கிராமத்தில் இருந்து அவலூா்பேட்டைக்குச் சென்றாா். மீண்டும் டிராக்டரிலேயே வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாரியமங்கலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரங்கநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT