திருவண்ணாமலை

ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

DIN

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள அலங்காரவள்ளி சமேத ஸ்ரீபசுபதீஸ்வரா் கோயிலில் 5-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோ பூஜை, வேள்வி, பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணத்துக்காக அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலிலிருந்து பக்தா்கள் திருக்கல்யாண சீா்வரிசை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக பசுபதீஸ்வரா் கோயில் சென்றடைந்தனா்.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்துகளில் குழந்தைகளுக்கான கட்டணமில்லா பயணம்: நடத்துநா்களுக்கு அறிவுறுத்தல்

புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தீஸ்கா்: கண்ணிவெடியில் சிக்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

வனப்பகுதியில் குடியிருப்போா் வெளியேற்றம்

மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT