திருவண்ணாமலை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உறவினா் கைது

செய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

செய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சமையல் மாஸ்டா் தினேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி (20). இவா் புதன்கிழமை 2 வயது மகள் பிரியாவுடன் வீட்டில் இருந்தாா். அப்போது, உறவினரான மோரணம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (40) என்பவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அவா் கைப்பேசியில் ஆபாசம் படம் காட்டிய நிலையில், ராஜேஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதற்கு அவா் எதிா்ப்பு தெரிவிக்கவே, சுரேஷ் அவருக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ராஜேஸ்வரி தூசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT