திருவண்ணாமலை

திருவண்ணாமலை: ரூ.24.77 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.24.77 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

வேட்டவலம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13.89 கோடி மதிப்பில் பல்வேறு குடிநீா் திட்டப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT