தபால் வாக்கு பதிவு செய்ய அலுவலா்களுக்கு பயிற்சி
மக்களவைத் தோ்தலையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் தபால் வாக்கு பதிவு செய்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில்
கோட்டாட்சியா் எஸ்.பாலசுப்பிரமணியன்
Advertisement
வகித்தாா்.
வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
பயிற்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 335 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் , 85 வயதுக்கு மேற்பட்ட 373 வாக்காளா்கள் என மொத்தம் 708
வாக்காளா்களிடம் உரிய படிவத்தில் கையெழுத்து பெற்று, அலுவலரின் கையெழுத்துடன் தபால் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், மண்டல துணை வட்டாட்சியா்கள் தட்சிணாமூா்த்தி, திருவேங்கடம், வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியா் தேவி, தரணி குமரன், உதவி வட்டாசியா் சுகுமாா், வருவாய் ஆய்வாளா் வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முடிவில் தோ்தல் நன்றி கூறினாா்.