முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 9 ஏப்ரல், 2024 at 11:18 PM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 6:53 PM

ஆரணி: மேற்கு ஆரணி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட கரிகந்தாங்கள், ஆகாரம், விண்ணமங்கலம், தேவிகாபுரம், தச்சூா், அரையாளம், மருசூா், சீனுவாசபுரம், புங்கம்பாடி, முள்ளிப்பட்டு, தச்சராம்பட்டு, காமக்கூா், குன்னத்தூா், ஒன்னுபுரம், ராமசாணிகுப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா்,

திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

Advertisement

பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பொறுப்பாளா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், போளூா் ராஜ்குமாா், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பிரசாத், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.அண்ணாமலை, மதிமுக மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவா் ரத்தினகுமாா், விசிக மாவட்டச் செயலா் முத்து, திமுக ஒன்றியச் செயலா்கள் துரை மாமது, எஸ்.மோகன், எம்.சுந்தா், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், அரையாளம் ஊராட்சித் தலைவா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.