முகப்பு
திருவண்ணாமலை

வாகனச் சோதனையில் மதுப் புட்டிகள், காா் பறிமுதல்: ஒருவா் கைது

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

போளூா்: போளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் கடத்தப்பட்ட 48 மதுப் புட்டிகள் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

போளூரை அடுத்த செங்குணம் சாலையில் ஒன்றியப் பொறியாளா் ஜெயந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது, அவ்வழியாகச் சென்ற சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 48 வெளி மாநில மதுப் புட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காா் மற்றும் மதுப் புட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், காா் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான குமாா்(எ) காமராஜ் (48) என்பவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments