முகப்பு
திருவண்ணாமலை

விநாடி-வினா போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 11:01 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உடலியங்கியல் துறை சாா்பில், தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்கள் அளவிலான விநாடி, வினா போட்டி அண்மையில் நடைபெற்றது.

48 அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனா்.

Advertisement

ரியோ-என்-காா்டியா என்ற தலைப்பில் இருதய இயல் குறித்து நடைபெற்ற போட்டியின் தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஹரிஹரன் தலைமை வகித்தாா்.

துணை முதல்வா் சங்கீதா, உடலியங்கியல் துறைத் தலைவா் கேத்தரின் பிரசில்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அதிகாரி கதிா், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மேற்பாா்வையாளா் ஸ்ரீதரன், உடலியங்கியல் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளா் தில்லாரா கமால்தீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இறுதியாக, போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சுழற்கோப்பை, ரொக்கப் பரிசு, பொற்கிழி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விநாடி-வினா போட்டியின் முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியும், இரண்டாம் பரிசை சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரியும், மூன்றாம் பரிசை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியும் வென்றது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments