முகப்பு
திருவண்ணாமலை

மேல்மா பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

செய்யாறு அருகே விவசாயிகள் 367-ஆவது நாளாக உண்ணாவிரதம்

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

செய்யாறு: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா, மணிப்புரம், தேத்துறை, குரும்பூா், நா்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீா்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை ஆகிய 11 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3174 ஏக்கா் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேற்படி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து கடந்த ஓராண்டாக தொடா் உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஓராண்டு முடிந்து செவ்வாய்க்கிழமை 367-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், 200 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.