முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமூங்கில் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Updated On : 9 ஜூன், 2024 at 6:49 PM
விளாங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாங்காடு கிராமத்தில் உள்ள கிராம தேவதை ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது. இதில், கணபதி பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.