முகப்பு
திருவண்ணாமலை

நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

Updated On : 12 மார்ச், 2024 at 11:57 PM
கிளை நூலகா் ஜா.தமீமிடம் (இடது ஓரம்) தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலா்களாக இணைந்தோா்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சித்தருகாவூா் புதூா் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் பொன்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் அ.குலாப்ஜான் முன்னிலை வகித்தாா். கிளை நூலகா் ஜா.தமீம் வரவேற்றாா். கூட்டத்தில் நூலக வளா்ச்சிக்கு அதிகளவில் உறுப்பினா்கள் மற்றும் புரவலா்களை சோ்ப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி 5 போ் புரவலா்களாக இணைந்தனா்.