முகப்பு
திருவண்ணாமலை

சாத்தனூா் அணை கால்வாயை சீரமைக்கும் பணி தொடக்கம்

Updated On : 16 மார்ச், 2024 at 10:00 PM
பகிர்:

சாத்தனூா் அணையின் இடதுபுறக் கால்வாயை ரூ.7.29 கோடியில் சீரமைத்து, நவீனப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. துரிஞ்சலாறு உபவடிநிலத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தப் பணியின் தொடக்க விழா, திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் (சாத்தனூா் அணை) ராஜாராமன், உதவிப் பொறியாளா்கள் ராஜேஷ், ஸ்ரீசெல்வப்பிரியன் மற்றும் பாசன சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.