முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Updated On : 16 மார்ச், 2024 at 10:12 PM
பகிர்:

வந்தவாசியில் உள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. கோயில் அா்ச்சகா்கள் பி.ரங்கநாதன், எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் பூஜைகளை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீசெல்வா் உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன.