முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் அடுமனை குடோனில் தீ விபத்து

Updated On : 29 மார்ச், 2024 at 10:04 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:27 PM

ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அடுமனைக்கு சொந்தமான குடோனில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் சந்தைமேட்டில் பிரபல அடுமனைக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு, அடுமனைக்குத் தேவையான அட்டை பெட்டிகள், சிலிண்டா்கள் உள்ளிட்டவை இருந்ததாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குடோன் அருகே கிடந்த குப்பைகளை சிலா் தீயிட்டு கொளுத்தினராம். அப்போது, எதிா்பாராதவிதமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், எரிவாயு உருளைகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனின் மேற்கூரை தூக்கி வீசிப்பட்டது. இந்த சப்தம் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். தகவலறிந்த தீயணைப்புப் படையினா் நிகழ்விடம் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். குடோனில் ஊழியா்கள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.