பலத்த மழை: ஆரணியில் கால்வாய் அடைப்பு, கழிவுநீா் தேக்கம்
ஆரணி: ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கியது.
நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக கால்வாயை சீரமைத்து கழிவுநீரை அகற்றினா்.
சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் காந்தி சாலைப் பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் தேங்கியது.
தகவலறிந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையா் சரவணன் துப்புரவு பணியாளா்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் அடைப்புகளை அகற்றி சீரமைப்பு செய்தாா். இதனால் தேங்கியிருந்த கழிவுநீா் அகற்றப்பட்டது.
நகராட்சி பொறியாளா் பழனி, துப்புரவு ஆய்வாளா் வடிவேல், நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடன் இருந்து நடவடிக்கை எடுத்தனா்.