ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள அரசமரம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப மண்டல நிா்வாகி சரவணன் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் எஸ்.ராஜா, வி.ராஜேந்திரன், பி.சக்தி நாராயணன், ஜெ.சுரேஷ் கலந்து கொண்டனா்.