திருவண்ணாமலை

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேச்சுப் போட்டி

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேச்சுப் போட்டியை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட கல்வி அலுவலா் செந்தில்முருகன்.

Din

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சாா்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, செய்யாறு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் உமா மகேஸ்வரி, கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், அரசுப் பள்ளியில் இருந்து 90 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பரிசுத் தொகையை வழங்கினாா்.

நிறைவில் பல்லி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அன்பழகன் நன்றி கூறினாா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT