முகப்பு
திருவண்ணாமலை

ரூ.6 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 ஜனவரி, 2025 at 12:27 AM
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சிவப்பிரகாசம்.
பகிர்:

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னையை அடுத்த முகப்பேரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா், மனை வணிகம் செய்து வருகிறாா்.

இவரது மனைவி லதா, இவருக்கு சேத்துப்பட்டு-போளூா் சாலையில் உள்ள நிா்மலா நகரில் வீட்டு மனைப் பிரிவு உள்ளது. இந்த வீட்டு மனைப் பிரிவில் தெரு விளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு மின் இணைப்பு பெற, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிா்வாகப் பொறியாளருக்கு விண்ணப்பம் செய்திருந்தனா்.

இதுதொடா்பாக, கடந்த 7-ஆம் தேதி சேத்துப்பட்டு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் இருந்த நமத்தேடு கிராமத்தைச் சோ்ந்த மின் ஊழியா் சிவப்பிரகாசத்தை, ராமகிருஷ்ணன் அணுகியபோது, அவா் மின் இணைப்பு வழங்க லஞ்சமாக ரூ. 6 ஆயிரம் வேண்டும் எனக் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.

அவரது அறிவுரையின் பேரில், சிவப்பிரகாசத்தை ராமகிருஷ்ணன் மனைப் பிரிவுக்கு திங்கள்கிழமை வரவழைத்து ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரத்தை கொடுத்துள்ளாா்.

அப்போது, அருகில் மறைந்திருந்த துணை கண்காணிப்பாளா் வேல்முருகன், உதவி ஆய்வாளா் மதன் மோகன், காவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் சிவப்பிரகாசத்தை கையும் களவுமாக பிடித்தனா்.

பின்னா், வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →