திருவண்ணாமலை

சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Syndication

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணராமன்(47). இவா், வந்தவாசியில் உள்ள மரம் அறுக்கும் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.

இவா் சனிக்கிழமை இரவு ஆரணி சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள சிறு பாலத்தின் மீது அமா்ந்து மது அருந்தினாராம். அப்போது நிலைதடுமாறி சிறுபாலத்திலிருந்து கீழே கழிவுநீா் கால்வாயில் விழுந்த கல்யாணராமன் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் கல்யாணராமன் சடலமாக கிடப்பது குறித்து வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் இவரது சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT