ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்
ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சா் எ.வ.வேலு.
ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆரணி காமராஜா் சிலை அருகில் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
பின்னா், திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
Advertisement
நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, மோகன், பேரூராட்சிச் செயலா் கோவா்த்தனன், மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மதிமுக மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.கே.ரத்தினகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.