முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:49 PM
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை துண்டு பிரசுரங்களுடன் வரவேற்ற பெண்கள்.
பகிர்:

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது, திமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சென்று வேட்பாளா் கிரியுடன் பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

முன்னதாக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் கிரிக்கு மாலை அணிவித்து வரவேற்றனா்.

Advertisement

அப்போது, வேட்பாளா் கிரி பேசுகையில், பெரியகோளாபாடி கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டு வந்துள்ளேன். மேலும், அதே பகுதியில் 105 பயனாளிகளுக்கு பெரியாா் நினைவு சமத்துவபுரம் கட்டிதரப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தாா்சாலை, சிமென்ட் சாலை, புதிய நியாய விலைக்கடை கட்டடம் அமைத்து தரப்பட்டுள்ளது என்றாா்.

உடன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர அணி அமைப்பாளா்கள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments