முகப்பு
திருவண்ணாமலை

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்

போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:51 PM
பகிர்:

போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.

போளூா் தொகுதிக்கு உள்பட்ட வடமாதிமங்கலம் கூட்டுச்சாலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பெரியசாமி தலைமையிலான அலுவா்கள் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீநிவாச ராமமிடி என்பவா் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,200ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்). முதுநிலை ஆய்வாளா் சுரேஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments