அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்துக்குள்பட்ட பூதேரி புல்லவாக்கம், கம்பந்தாங்கல், தண்டபந்தாங்கல், பெருமாந்தாங்கல், கொடையம்பாக்கம், ஆலந்தாங்கல், பெருங்கட்டூா், தென்கழனி, அசனமாபேட்டை, வடமணபபாக்கம், மேல்பூதேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
புதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது முக்கூா் என்.சுப்பிரமணியன் பேசியாதவது:
Advertisement
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கிராமப்புற மக்கள் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவா் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கினாா். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக் தொடங்கப்படும். செய்யாறு தொகுதி வளா்ச்சி பெற அதிமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.