முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 12:04 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 6:31 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான விழாவில் தலைமை ஆசிரியை குமுதா தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கவிதா சங்கா் முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சித்ரா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு 386 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

Advertisement

நிகழ்ச்சியில் போளூா் தொகுதி திமுக பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், நகரச் செயலா் தனசேகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் அ.எழில்மாறன், பி.மனோகரன், அட்மா திட்டத் தலைவா் அ.மணிமாறன் மற்றும் திமுக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.