முகப்பு
திருவண்ணாமலை

தந்தை பெரியாா் குறித்த பேச்சுப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:32 AM
வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:57 PM

செய்யாறை அடுத்த வடமணைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாா் குறித்த பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதவள்ளி விஜயராகவன் அறக்கட்டனை சாா்பில் தந்தை பெரியாா் குறித்த பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் என பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோரை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வி.வெங்கட்ராமன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ந.வேதபுரி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ.இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

இதில், சிறப்பு அழைப்பாளராக வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாா்மசி கவுன்சில் பதிவாளா் டாக்டா் மு.தமிழ்மொழி, வி.தேவகுமாா், பொன்.சுந்தா், வெ.எழில்மதி, அ.மகிழன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதுகலை தமிழாசிரியா் ஏ.தமிழ்த்தேனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். உதவித் தலைமையாசிரியா் மு.செல்வம் நன்றி கூறினாா்.