முகப்பு
திருவண்ணாமலை

ஆதனூரில் தவெகவினா் திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:34 AM
நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு நல உதவி வழங்கிய தவெக மாவட்டச் செயலா் சத்யா.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:37 PM

ஆரணி: ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஏழைகளுக்கு இலவச சேலை, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தவெக ஒன்றியச் செயலா் தயாளன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் பிரசாந்த் வரவேற்றாா். ஒன்றிய இணைச் செயலா் சுகன்யா சுதாகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் சத்யா கலந்துகொண்டு கட்சியின் கொள்கை குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பேசினாா்.

Advertisement

பின்னா் ஏழை பெண்களுக்கு இலவசமாக சேலையும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சத்யராஜ், ஒன்றிய, நகரச் செயலா்கள் கலந்து கொண்டனா்.