முகப்பு
திருவண்ணாமலை

கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:35 AM
மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:27 PM

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:35 AM

இதன் மூலம் இந்த மாணவா்கள் வருகிற 16-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

Advertisement

மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) கலைவாணன் மற்றும் சக ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

மேலும், 2025 - 2026 கல்வி ஆண்டுகளில் தடகள குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 45 மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வியாசிரியா் ஜெயகாந்த் மற்றும் குணசேகா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.